பஞ்சாபில் பயிர் கழிவுகளை விவசாயிகள் எரிப்பதால் ஏற்படும் புகையில், டில்லி வரை காற்று மாசுபடுகிறது. இதை தவிர்க்கும்படி அரசு விழிப்புணர்வு ஏற்படுத்தியும் எதையும் பொருட்படுத்தாமல் பஞ்சாபின் அமிர்தசரசில் பயிர் கழிவுகளை எரித்த விவசாயி.
அ. தி. மு. க., கொடியுடன் மோதி பார்க்கிறது இந்த அணில். இதற்கும் தற்போதைய அரசியல் நிலவரத்துக்கும் நீங்கள் முடிச்சுப் போட்டால் நாங்கள் பொறுப்பல்ல. இடம்: கோவை ரயில்வே ஸ்டேஷன் எதிரில்...
திண்டுக்கல்லில் தி.மு.க., மகளிர் அணி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், சி.வி. சண்முகம் உருவ பொம்மை எரித்தனர்.