எவ்வளவு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தினாலும் இது போன்றவர்களை என்ன செய்வது... சென்னை மந்தைவெளி பகுதியில் இருசக்கர வாகனத்தில் பள்ளி சிறுவர்கள் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொண்டனர்.
உதவும் மனது உள்ளத்தில் இருந்தால்தான் மனிதர்களுக்கு பெருமை..: விடாத மழையில் நனைந்து கொண்டிருந்த மாற்றுத்திறனாளியை குடை பிடித்து ரோட்டை கடந்து பாதுகாப்பான இடத்தில் விட்டு சென்ற இந்த பெண்கள்.இடம், திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம்.
மதுரை கலெக்டர் அலுவலகம் முன்புஅகவிலைப்படி சம்பள உயர்வை வலியுறுத்தி மறியல் செய்த தமிழ்நாடு அங்கன்வாடி கூட்டமைப்பு சங்கத்தினரை போலீசார் கைது செய்து அரசு பஸ்ஸில் அழைத்துச் சென்றனர்.