கரூரில் நடந்த தவெக கட்சி பேரணியில் தலைவர் விஜய் பங்கேற்றார். இவரை காண திரண்ட கூட்டத்தில் பெரும் நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி 39 பேர் உயிரிழந்தனர். உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
விழுப்புரம் கீழ்பெரும்பாக்கத்தில் உள்ள ஸ்ரீதேவி பூதேவி சமேத ஆனந்த வரதராஜ பெருமாள் கோவிலுக்கு விஸ்வஹிந்து பரிஷத் அமைப்பு சார்பில் வந்த திருப்பதி கொடை பொதுமக்கள் மத்தியில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.
நடிகர் சிவாஜி பிறந்த நாளை முன்னிட்டு இ.சி.ஆரில் உள்ள அவரது சிலைக்கு அரசு சார்பில் சபாநாயகர் செல்வம், அமைச்சர் லட்சுமி நாராயணன்,மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
ஆயுத பூஜையை முன்னிட்டு சட்டசபையில் உள்ள முதல்வர் அலுவலகத்தில் முதல்வர் ரங்கசாமி சரஸ்வதி படம் வைத்து பூஜை செய்தார். அருகில் துணை சபாநாயகர் ராஜவேலு மற்றும் ஊழியர்கள்.