விஜயதசமி முன்னிட்டு, கோவை ஸ்ரீ ஐயப்பன் பூஜா சங்கத்தில் தினமலர் நாளிதழ் சார்பில் குழந்தைகளுக்கு 'அ'னா, 'ஆ'வன்னா எழுத பயிற்றுவிக்கும் அரிச்சுவடி ஆரம்பம் நிகழ்ச்சி நடந்தது .
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், கொடுந்திரப்புள்ளி ஆதிகேசவ புரம் ஐயப்பன், ஆதிகேசவ பெருமாள் கோவிலில் மகாநவமி நவராத்திரி உற்சவத்தை முன்னிட்டு, 15 யானைகளின் அணிவகுப்பில் முத்துமணி வண்ண குடைகள் மாற்றும் நிகழ்ச்சி நடந்தது.
சிறுமியரை துர்க்கையின் அவதாரமாக வழிபடும் குமாரி பூஜை வட மாநிலங்களில் நடந்தது. உத்தர பிரதேசத்தின் கோரக்பூரில் நடந்த நிகழ்வில் ஒரு பெண் குழந்தையின் கால்களை கழுவி பூஜை செய்த அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்.
விழுப்புரம் கீழ்பெரும்பாக்கத்தில் உள்ள ஸ்ரீதேவி பூதேவி சமேத ஆனந்த வரதராஜ பெருமாள் கோவிலுக்கு விஸ்வஹிந்து பரிஷத் அமைப்பு சார்பில் வந்த திருப்பதி கொடை பொதுமக்கள் மத்தியில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.
நடிகர் சிவாஜி பிறந்த நாளை முன்னிட்டு இ.சி.ஆரில் உள்ள அவரது சிலைக்கு அரசு சார்பில் சபாநாயகர் செல்வம், அமைச்சர் லட்சுமி நாராயணன்,மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
ஆயுத பூஜையை முன்னிட்டு சட்டசபையில் உள்ள முதல்வர் அலுவலகத்தில் முதல்வர் ரங்கசாமி சரஸ்வதி படம் வைத்து பூஜை செய்தார். அருகில் துணை சபாநாயகர் ராஜவேலு மற்றும் ஊழியர்கள்.