இந்திய கடலோர காவல் படை சார்பில், எண்ணெய் கசிவு பேரிடர் மற்றும் தீ விபத்தை கட்டுப்படுத்தும் ஒத்திகை சென்னை கடற்பகுதியில் நடந்தது. இதில் கடலோர காவல் படையின் 'சமுத்திரா பிரஹாரி' கப்பல், மற்றொரு கப்பலில் எரிந்த தீயை அணைக்க தண்ணீரை பீய்ச்சி அடித்தது.
சட்டசபை தேர்தல் நெருங்குவதை யொட்டி ஓட்டுச்சாவடியில் இருந்து தூரத்தை அறிந்து கொள்ளும் வகையில் சாலையில் குறியீடு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள மாநகராட்சி ஊழியர்கள். இடம்.ஜி.என்.செட்டி சாலை, தி.நகர்
உத்தமபாளையம் தாலுகா காமயகவுண்டன்பட்டியில் கல்குவாரி செயல்பட வலியுறுத்தி தேனி கலெக்டர் அலுவலகம் அருகே ஏ.ஐ.டி.யூ.சி., சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.