வனப்பகுதியில் புதுசா ரிசார்ட் கட்டியிருக்கானு நினைச்சுக்காதீங்க, பல ஆண்டு போராட்டத்துக்கு பின், மண் குடிசையில் வாழ்ந்த பழங்குடியின மக்களுக்கு புதிதாக கான்கிரீட் வீடு கட்டி கொடுத்திருக்கு தமிழக அரசு. இடம்: டாப்சிலிப், பொள்ளாச்சி.
இந்திய கடலோர காவல் படை சார்பில், எண்ணெய் கசிவு பேரிடர் மற்றும் தீ விபத்தை கட்டுப்படுத்தும் ஒத்திகை சென்னை கடற்பகுதியில் நடந்தது. இதில் கடலோர காவல் படையின் 'சமுத்திரா பிரஹாரி' கப்பல், மற்றொரு கப்பலில் எரிந்த தீயை அணைக்க தண்ணீரை பீய்ச்சி அடித்தது.
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் உடல்நலம் குறித்து அவரது குடும்பத்தினரிடம் முதல்வர் ஸ்டாலின் கேட்டறிந்தார்.