திருப்பூர், கரூர் மாவட்டங்களுக்கு பாசனம், குடிநீருக்கு அமராவதி அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் ஆற்றில் செடிகளுக்கு நடுவே பாய்ந்து செல்கிறது. இடம்: மடத்துக்குளம், உடுமலை.
தைப்பூச திருவிழாவை முன்னிட்டு சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் தெப்பத் திருவிழா நேற்று நடந்தது இதில் கபாலீஸ்வரர் தெப்பத்தில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.