மெரினா கடற்கரையை தொடர்ந்து, நீலக்கொடி கடற்கரை சான்றிதழ் பெற, பல்வேறு கடற்கரைகளை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக சென்னை பாலவாக்கம் கடற்கரையில் மாநகராட்சி சார்பில் மரக்கன்றுகள் நடும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது.
நீட் தேர்வு குளறுபடிகளை கண்டித்து சாஸ்த்திரி பவன் எதிரில் எஸ். எப். ஐ இந்திய மாணவர் சங்கம் முற்றுகை போராட்டம் நடத்தினர் இதனை தொடர்ந்து காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர். இடம்: நுங்கம்பாக்கம்
திருப்பூரில், பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி அகில இந்திய பி. எஸ். என்.எல் ஊழியர்கள் மற்றும் டாட் ஓய்வூதியர் சங்கம் சார்பில் ஆர்பாட்டம் பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு நடந்தது.