திருவாலங்காடு ஒன்றியம் எல்.வி.புரம் கொசஸ்தலையாற்று நீர் வழித்தடத்தில், போக்குவரத்து போலீசார் பேரிகேட் வைத்து உள்ளனர். நீரோட்டத்தை திருப்பி விட வைக்கப்பட்டு உள்ளதாக, அப்பகுதி மக்கள் கிண்டலடித்து செல்கின்றனர்.
கோவையில் ஜாக் அமைப்பு சார்பில் ரம்ஜான் சிறப்புத் தொழுகை குனியமுத்தூர் ஆயிஷா மஹால் வளாகத்தில் நடந்தது. இதில் தொழுகைக்குப் பின் ரம்ஜான் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்ட சிறுவர்கள்.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தும் கோவையில் இன்னும் சில பகுதிகளில் கட்சி சார்ந்த போஸ்டர்கள் அகற்றப்படாமல் தான் உள்ளன. இடம்: காட்டூர் பிள்ளையார் கோவில் தெரு.
வடநாட்டுக்காரங்க அதிகமா ஆயிட்டாங்க போல இருக்கு...! கோவையில் கேஸ் தட்டுப்பாடு மெல்ல, மெல்ல அதிகரிக்க துவங்கியதால் சில சிறிய ஓட்டல்களில் உணவு பொருட்களின் விலைகளை உயர்த்தி உள்ளனர்.