இந்தியா-பாக் சர்வதேச எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள நம் ராணுவத்தினர் தீபாவளி பண்டிகையை கொண்டாடினர். அவர்களின் குடும்பங்கள் தூரத்தில் இருந்த போதும் சக வீரர்களையே குடும்பமாக்கி மகிழ்ந்தனர்.
திருவள்ளூர் அடுத்த பூண்டி நீர் தேக்கம் நிரம்பியதால், திறக்கப்பட்ட உபரி நீர் தாமரைப்பாக்கம் அணைக்கட்டு வழியாக சீறிப்பாய்ந்து கடலுக்குச் செல்லும் காட்சி.
தீபாவளியையொட்டி சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு புறப்பட்ட வாகனங்களால், ஜிஎஸ்டி சாலையில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்த வாகனங்கள். இடம்: கிளாம்பாக்கம்.
இது எந்த ஊர் திருவிழா, இவ்வளவு கூட்டம் என்று எண்ண வேண்டாம். தீபாவளிக்கு மட்டன் சாப்பிட விரும்புபவர்களின் தேவைக்காக கொண்டு வரப்பட்ட ஆடுகளை விற்கவும், வாங்கவும் கூடிய கூட்டம் தான் இது. இடம்: திருமங்கலம், மதுரை மாவட்டம்.