நம் நாட்டின் வலிமையை பறைசாற்றும் விதத்தில், ராணுவத்தில் பயன்படுத்தப்படும் ஆயுதங்கள் அருணாச்சல பிரதேசத்தில் உள்ள தவாங்க் என்ற இடத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டன. இதில் வைக்கப்பட்டிருந்த நவீன ரக துப்பாக்கியை சிறுவனிடம் காட்டி விளக்கம் அளித்த ராணுவ வீரர்.
மும்பை உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து மஹாராஷ்டிராவின் பாந்த்ரா ரயில் நிலையத்தை ஒட்டிய கரீப் நகரில் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டிருந்த 500க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.
சிறுமுகை வன சரகத்திலிருந்து தாயை பிரிந்த யானை குட்டி., பெத்தி குட்டையில் உள்ள வன உயிரின இடம் மாற்றம் மற்றும் சிகிச்சை மையத்தில் வைத்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.