மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்துவரும் மழையால் தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள ராம நதி அணையின் நீர் மட்டம் உயர்ந்து ரம்மியமாக காட்சியளிக்கின்றது.
நம் நாட்டின் வலிமையை பறைசாற்றும் விதத்தில், ராணுவத்தில் பயன்படுத்தப்படும் ஆயுதங்கள் அருணாச்சல பிரதேசத்தில் உள்ள தவாங்க் என்ற இடத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டன. இதில் வைக்கப்பட்டிருந்த நவீன ரக துப்பாக்கியை சிறுவனிடம் காட்டி விளக்கம் அளித்த ராணுவ வீரர்.
சென்னை ராஜா அண்ணாமலை புரத்தில் புதுப்பிக்கப்பட்ட தொல்காப்பிய பூங்காவை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். காண்போரை கவரும் வண்ணத்திலும், குழந்தைகளுக்கு பிடிக்கும் ஏராளமான சிற்பங்களுடனும் இந்த பூங்கா உள்ளது.
விருத்தாசலம் அடுத்த எருமனூரில் உள்ள தற்காலிக நெல் கொள்முதல் நிலையத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து நெல் மணிகள் முளைத்துள்ளன.