சேலம் மாவட்டம் மேட்டூர் அணை 16 கண் மதகில் அக் 27ல் உபரி நீர் திறப்பை நிறுத்திய நிலையில், அப்பகுதியில் உள்ள குட்டையில் இருந்து வெளியேற முடியாமல் தவித்த ஏராளமான மீன்கள் ஆக்சிஜன் பற்றாக்குறையால் செத்து மிதந்தன.
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.