ராமாயணத்தில் ராமர் நடந்த பாதையை நினைவு கூரும் வகையில், ஆண்டுக்கு ஒரு முறை அயோத்தியில் இருந்து 42 கி.மீ., தூரத்துக்கு ஒரு நாள் புனித யாத்திரை நடக்கும். யாத்திரையில், ஜெய் ஸ்ரீ ராம் என முழக்கமிட்டபடி பக்தி பரவசத்துடன் சென்ற பக்தர்கள்.
கேரள மாநிலம் இடுக்கி அணையின் ஒரு பகுதியான செருதோணி அணையில், ஒரு புறம் தண்ணீரும், அதற்கு ஏற்ப மறுபுறம் மேகங்கள் சூழ்ந்தும் ரம்மியமாக காட்சி அளிக்கிறது.
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். உடன் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உட்பட நிர்வாகிகள் பலரும் இருந்தனர்.
திருச்சி மாவட்டத்தில் கொள்முதல் செய்த நெல்லை எடுத்துச் செல்ல லாரிகள் வராததால், உத்தமர்சீலி, பனையபுரம், கிளிக்கூடை கிராமங்களில் அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகளாகவும், குவியலாகவும் தேங்கி கிடக்கிறது.