டில்லி ஜனாதிபதி மாளிகையில் உள்ள புகழ்பெற்ற அமிர்த உத்யானம் எனப்படும் மலர்த்தோட்டம் பொதுமக்களின் பார்வைக்காக வரும் 3ம் தேதி முதல் மார்ச் 31ம் தேதி வரை திறக்கப்படுகிறது. தோட்டத்தில் பூத்து குலுங்கிய வண்ண மலர்கள்.
ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் 2019, பிப்.,14ல் நடந்த பயங்கரவாத தாக்குதலில், 40 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். அந்த வடுக்களில் இருந்து மெல்ல மீண்டும் புதுப்பொலிவை புல்வாமா பெற்றுள்ளது.
மெட்ராஸ் கெனைன் கிளப் சார்பில் சென்னையில் நடந்த நாய் கண்காட்சியில் பங்கேற்று அசத்திய விதவிதமான நாய்கள். இடம்: செயின்ட் பீட்ஸ் பள்ளி மைதானம், மயிலாப்பூர்.
கடலூர் மாவட்டம் வடலூர் அருட்பிரகாச வள்ளலார் ராமலிங்க அடிகளார் நிறுவிய சத்திய ஞான சபையில், சுத்த சன்மார்க்க கொடியேற்றத்துடன் தைப்பூச ஜோதி தரிசன பெருவிழா தொடங்கியது.
திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை சி.ஜி.என்.கண்டிகை ரேஷன் கடை கூரையில் செடி, கொடிகள் வளர்ந்திருந்தன. இது குறித்து நம் நாளிதழில் வெளியான செய்தியின் எதிரொலியால் ஊராட்சி நிர்வாகம் சார்பில் ரேஷன் கடையில் வளர்ந்திருந்த செடி, கொடிகள் அகற்றப்பட்டுள்ளன.
தினமலர் நாளிதழின் மாணவர் பதிப்பான பட்டம் இதழ் மற்றும் ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி இணைந்து நடத்தும் மெகா வினாடி- வினா விருது நிகழ்ச்சியில் பங்கேற்று, ரோபோ சிட்டியை பார்த்து வியந்த மாணவர்கள்.