கடந்த இரண்டு மாதங்களாக, பறவை காய்ச்சல் காரணமாக மூடப்பட்டிருந்த டில்லி தேசிய உயிரியல் பூங்கா, பொதுமக்கள் பார்வைக்கு மீண்டும் திறக்கப்பட்டது. பூங்காவில் உள்ள குளத்தில் இரண்டு பெலிக்கன் பறவைகள் மீன்களை வேட்டையாடி பசி தீர்த்துக்கொண்டன.
கிறிஸ்மஸ் பண்டிகையொட்டி சென்னை எழும்பூர் போர்டெல் ஹோட்டலில் 100 கிலோ எடையுள்ள பிளம் கேக் கலவை தயாரிக்கும் பணி துவங்கியது. இதில் வைகை ஹோட்டல் குழுமம் இயக்குனர் சித்தார்த்.தினமலர் முதன்மை மக்கள் தொடர்பு அதிகாரி கல்பலதா.
கார்த்திகை தீபத்தை ஒட்டி வெளி மாநிலத்திற்கு அனுப்புவதற்காக விருத்தாசலம் செராமிக் தொழில்பேட்டையில் அகல் விளக்குகள் தரம் பிரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள்.
நிக்காம ஓடு, ஓடு.! ஸ்போர்ட்ஸ் லேண்ட் சார்பில் பள்ளிகளுக்கு இடையேயான தடகள போட்டிகள் கோவை நேரு ஸ்டேடியத்தில் நடந்தன. இதில் 200 மீட்டர் ஓட்டப்பந்தய போட்டியில் ஓடிய குட்டி மாணவிகள்.