பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கம் சார்பில், அரசாணை எண் 20ன் படி, சிறப்பு ஆட்சேர்ப்பு தேர்வு உடனடியாக நடத்தி பணி வழங்க கோரி, சென்னையில் நீதி கேட்கும் போராட்டம் நடந்தது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் லேம்ஸ் ராக், டால்பின் நோஸ் காட்சி முனை செல்லும் சாலையோர தேயிலை தோட்ட பகுதிகளில் மேகமூட்டம் நிலவிய போதும், செல்பி மற்றும் போட்டோ எடுக்க சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டினர்.
காஞ்சிபுரம் வல்லக்கோட்டை முருகன் கோவிலில், மூலவர் வெற்றிலை மாலை அலங்காரத்திலும், உற்சவர் முருகன் ஏலக்காய் மாலை, சாமந்தி மாலை அணிந்து, ரத்னாங்கி சேவை அலங்காரத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.