குஜராத் மாநிலம் சூரத் நகரில் நடந்து வரும் புல்லட் ரயில் திட்டப் பணிகளை, பிரதமர் மோடி நேரில் பார்வையிட்டார். அப்போது புல்லட் ரயில் மாதிரி வடிவம் வாயிலாக திட்டப் பணிகளை விவரித்த இன்ஜினியர்.
காஞ்சிபுரம் சித்தி விநாயகர் பூந்தோட்டம் சாலையோரத்தில் குப்பைகள் கொட்டப்பட்டிருந்தது. இது குறித்த செய்தி நம் நாளிதழில் வெளியானதையடுத்து, காஞ்சிபுரம் மாநகராட்சி நிர்வாகம் சார்பில், குவியலாக இருந்த குப்பை தூய்மை பணியாளர்கள் வாயிலாக அகற்றப்பட்டது.
சென்னையில் உள்ள பல்வேறு நிழற்குடைகள் நவீன வடிவம் அடைந்து வரும் நிலையில், அடையாறு, தொல்காப்பியர் பூங்கா பஸ் நிறுத்த பயணியர் நிழற்குடையில் அவ்வழியே செல்வோரை கவரும் விதமாக வண்ண ஓவியங்கள் வரையப்பட்டு உள்ளன.
எண்ணூர் துறைமுகம்- மாமல்லபுரம் வரை 12,301 கோடி ரூபாயில், சென்னை சாலை திட்ட பணி நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் அடுத்த வெங்கத்தூரில் கூவம் ஆற்றில் நடந்து வந்த மேம்பால பணி வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டு உள்ளது.