வங்கதேச தலைநகர் டாக்காவில் நடந்த மகளிர் உலக கோப்பை கபடி போட்டியில், தைவான் அணியை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. அந்த மகிழ்ச்சியோடு மைதானத்தை வலம் வந்த இந்திய வீராங்கனையர்.
திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் பெய்துவரும் பலத்த மழையால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் ஏரல் தரைப்பாலத்தை மூழ்கடித்து செல்லும் தண்ணீர்..
சென்னை மாநகராட்சியின் பள்ளிக்கல்வித்துறை சார்பில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து அண்ணாநகர் டவர் பூங்கா வாயிலில மாணவர்களின் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடந்தது.