வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் பெரும்பாலான படிவங்கள் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், அப்பணியை எதிர்த்து காங்கிரசார் போராட்டம் நடத்தினர். அப்போது தொண்டர் ஒருவர் போலீசாரின் தடுப்பைத் தாண்டி தலைகீழாக குதித்தார். இடம்: லக்னோ, உத்தரபிரதேசம்.
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.