அடுத்த மாதம் 25ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, ஐரோப்பிய நாடான பிரிட்டனின் லண்டன் நகரில் நடைபெற்ற கண்காட்சியில், 'தி ஜிஞ்சர் பிரெட் சிட்டி' என்ற இஞ்சி ரொட்டியால் உருவாக்கப்பட்டிருந்த நகரத்தை ஆர்வமுடன் பார்வையிட்ட பெண்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் பெரும்பாலான படிவங்கள் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், அப்பணியை எதிர்த்து காங்கிரசார் போராட்டம் நடத்தினர். அப்போது தொண்டர் ஒருவர் போலீசாரின் தடுப்பைத் தாண்டி தலைகீழாக குதித்தார். இடம்: லக்னோ, உத்தரபிரதேசம்.
குளிர் சீசனை அனுபவிக்க சுற்றுலா தலங்களுக்கு ஏராளமானோர் வருகின்றனர். உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில், தாஜ்மஹால் அருகே உள்ள ஒரு ஹோட்டலின் மொட்டை மாடியில் அமர்ந்து காபியை ருசித்தபடி, அதன் அழகை ரசித்த வெளிநாட்டு சுற்றுலா பயணியர்.
கோவா மாநிலத்தில் உள்ள ஸ்ரீ சமஸ்தான் கோகர்ண ஜீவோத்தம் மடத்தில், 77 அடி உயர வெண்கல ராமர் சிலை நிறுவப்பட்டுள்ளது. ஆசியாவிலேயே உயரமான இந்த சிலையை இன்று பிரதமர் மோடியை திறந்து வைத்தார்.
கடலூர் அடுத்த நொச்சி காடு கிராமத்தில் தொழில் பூங்கா அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பசுமை தாயகம் தலைவர் சௌமியா அன்புமணி பொதுமக்களை சந்தித்து பேசினார்.
திருவள்ளூர் செங்குன்றம் சாலையில் உள்ள விஷ்ணுவாக்கம் கிராமத்தில் எம்ஜிஆர் நகர் உள்ள விவசாய நிலத்தில் பழமையான லஷ்மி நரசிம்மர் சிலை. ஒரு கால பூஜை கூட நடைபெறாமல் உள்ளது