sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 01, 2025 ,கார்த்திகை 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் திருவிழாவின் 7ம் நாளான நேற்று தேரோட்டம் நடந்தது. உண்ணாமுலை அம்மனும்-அண்ணாமலையாரும் சிறப்பு அலங்காரத்தில் பெரிய தேரில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் அண்ணாமலையாருக்கு அரோகரா என்ற கோஷத்துடன் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
01-Dec-2025

ShareTweetShareShare
இன்றைய போட்டோ30-Nov-2025

2/

டிட்வா புயல் காரணமாக சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் கடல் அலை சீற்றத்துடன் காணப்பட்டன.
30-Nov-2025

3/

கார்த்திகை திருநாளை முன்னிட்டு சிவகங்கையில் மண் விளக்குகள் விற்பனையாகி வருகிறது.
30-Nov-2025

4/

இயற்கையை ரசித்து கொண்டிருக்கும் பறவை. இடம்:வாலாங்குளம், கோவை
30-Nov-2025

5/

தினமலர் நாளிதழின் லட்சிய ஆசிரியர் விருது வழங்கும் விழா கோவையில் நடந்தது. இதில் கோவை மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் பங்கேற்று ஆசிரியர்களுக்கு விருதுகளை வழங்கினார்.
30-Nov-2025

6/

கடல் சீற்றத்துடன் காணப்படும் நிலையில், சுற்றுலா பயணிகள் குழந்தைகளுடன் கடற்கரைக்கு வந்து ஆபத்தை உணராமல் புகைப்படம் எடுத்து செல்கின்றனர். இடம்: தரங்கம்பாடி கடற்கரை, மயிலாடுதுறை.
30-Nov-2025

7/

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அரசு தொடக்கப்பள்ளியில் கழிப்பறைக்கு கூரை அமைக்கப்படாமல் இருந்ததால், மாணவர்கள் கடும் அவதிப்பட்டு வந்தனர். இது குறித்து நம் நாளிதழில் செய்தி வெளியானதை தொடர்ந்து அரசு பள்ளியில் உள்ள கழிப்பறைக்கு கூரை அமைக்கப்பட்டு உள்ளது.
30-Nov-2025

8/

உத்தரபிரதேசம் வாரணாசியில் உள்ள கோர்க்கா மையத்தில் பயிற்சி முடிந்து, நம் ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றவுள்ள அக்னிவீரர்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
30-Nov-2025

9/

வரும் 2030ல் நடக்க உள்ள காமன் வெல்த் விளையாட்டு போட்டிகளை நடத்தும் உரிமையை குஜராத்தில் உள்ள ஆமதாபாத் பெற்றுள்ளது. இதையடுத்து, அங்குள்ள நரேந்திர மோடி மைதானத்தை சுற்றியுள்ள கட்டடங்கள் இடிக்கப்பட்டு புனரமைப்பு பணிகள் துவங்கி உள்ளன.
30-Nov-2025

10/

கார்த்திகை மாதத்தையொட்டி, தீப உற்சவம் கோவை ரேஸ்கோர்ஸ் சாரதாம்பாள் கோவிலில் நடந்தது. இதில் விளக்கேற்றி வழிபாடு செய்த பக்தர்கள்.
30-Nov-2025

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us