விட்டு விட்டு பெய்து வரும் மழையால் ஆங்காங்கே காய்ந்து கிடந்த தடுப்பணைகளில் சிறிதளவு தேங்கியுள்ள நீரில் இறை தேடி வரும் இந்த கொக்கு அப்பகுதிக்கு மேலும் அழகு சேர்க்கிறது. இடம்: கோவை பேரூர் பச்சாபாளையம்.
சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டசபை தொகுதிகளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணி தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சிகளுடன் ஆலோசனைக் கூட்டம் சென்னை ரிப்பன் மாளிகையில் நடந்தது.
திருநெல்வேலி மாவட்டம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சமிபத்தில் பெய்த மழையால் கங்கைகொண்டான் அரசு கால்நடை மருத்துவமனையை மழை நீர் சூழ்ந்து காணப்படுகிறது...
தூத்துக்குடி மாவட்டம் செட்டிகுறிச்சி பகுதியில் பயிரிடப்பட்டுள்ள செடிகளில் பணி போல் படர்ந்து பூத்துக்குலுங்கும் வெள்ளை சாமந்தி பூக்கள் ரம்மியமாக காட்சியளிக்கின்றது.
தென்னிந்திய பாதுகாப்பு தளவாட உபகரண விநியோகஸ்தர்கள் மற்றும் ஸ்டார்ட் - அப் சங்கமான சிடா சார்பில் பாதுகாப்பு தளவாட உபகரணங்களின் கண்காட்சி கோவை ஈச்சனாரி ரத்தினம் கிராண்ட் ஹாலில் துவங்கியது.