திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் மரத்தினால் செய்யப்பட்ட குழந்தைகள் விளையாட்டு பொருட்கள், நடை வண்டி, மர பொம்மைகள் போன்றவற்றுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது..
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்ற ஐகோர்ட் மதுரை கிளையின் உத்தரவை செயல்படுத்தாத மாநில அரசை கண்டித்து பாஜவினர் ஆர்ப்பாட்டம். இடம்: மேட்டுப்பாளையம்பஸ் ஸ்டாண்ட்,
போலி மருந்து விவகாரத்தில் புதுச்சேரி செட்டி தெருவில் உள்ள பார்ம் ஹவுஸ் மற்றும் ஸ்ரீ சன் பார்மா மருந்து நிறுவனத்தை மருந்து கட்டுப்பாட்டு துறை ஆய்வாளர் கீர்த்தனா பூட்டி சீல் வைத்தார்.
நாட்டின் கடல்சார் வலிமை, போர் திறன், நவீன தொழில்நுட்பம் ஆகியவற்றை பொதுமக்களுக்கு காட்சிப்படுத்தும் நோக்கி கடற்படை தினக் கொண்டாட்டங்கள் நடத்தப்படுகின்றன. அதன் ஒரு பகுதியாக கேரளாவின் திருவந்தபுரம் சங்குமுகம் கடல் பகுதியில் நம் கடற்படை நடத்திய சாகச நிகழ்ச்சி.
திருவள்ளூர் மாவட்டம், தொழுதாவூரில் பைப் லைன் உடைந்து குடிநீர் வீணாகி வருவதாக நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து ஊராட்சி சார்பில் பைப் லைன் சீரமைக்கப்பட்டு உள்ளது.