திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற ஐகோர்ட் கிளை பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றாத தமிழக அரசை கண்டித்து ஹிந்து முன்னணி சார்பில் மதுரையில் ஆர்பாட்டம் நடந்தது.
திருப்பூரில், இந்து முன்னணி சார்பில் திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்ற நீதிமன்ற உத்திரவை மதிக்காத திமுக அரசை கண்டித்து விளக்குகளுடன் தாராபுரம் ரோடு, சந்திராபுரம் பிரிவில் ஆர்பாட்டம் நடந்தது.
சென்னை பிரேசில் பாலம், சென்ட்ரல் ரயில் நிலையம் இடையில் சிக்னல் கோளாறு காரணமாக திருவள்ளூரில் இருந்து சென்ட்ரல் ரயில் நிலையம் வரை இயக்கப்படும் மின்சார ரயில் ஒரே இடத்தில் நின்றதால் பயணிகள் அவதி.
கேரள மாநிலம் சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வரும் நிலையில் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள ஐயப்பன் கோவிலுக்கு பக்தர்கள் வரத் துவங்கியுள்ளனர்.
திருநெல்வேலி அருகே ரெட்டியார்பட்டியில் ரூ.56 கோடி மதிப்பில் உருவான பொருநை அருங்காட்சியகத்தை வரும் 20ஆம் தேதி முதல்வர் திறந்து வைக்கவுள்ள நிலையில் அதற்கான இறுதிக்கட்ட பணிகள் நடந்துவருகிறது...