ஊட்டியில் கடுமையான குளிர் நிலவுகிறது. இருந்தாலும் இந்த குளிரை அனுபவிக்க சுற்றுலா பயணியர் வருகின்றனர். அங்கே உள்ள சுற்றுலா தலங்களில் ஒன்றான சூட்டிங்மட்டம் என்ற இடத்தில் காட்சிகளை ரசிக்க வந்த மக்கள்.
இடைவிடாத வாகன போக்குவரத்து காரணமாக, மழையில் நனைந்த படி சாலையை கடக்க முடியாமல் சிரமப்பட்ட மாற்றுத்திறனாளியை பார்த்த இந்த பெண்மணி, தன் குடையை அவருக்கு பிடித்து அவர் மழையில் நனையாமல் சாலையைக் கடக்க உதவி செய்தார். இடம்: கலெக்டர் அலுவலகம் அருகில், திண்டுக்கல்.
உத்தர பிரதேச மாநிலம் மதுராவில் ஓடும் யமுனை நதியை பெண் தெய்வமாக கருதி, ஆண்டிற்கு ஒரு முறை பல வண்ண புடவைகளால் அலங்கரித்து அப்பகுதி மக்கள் வழிபடுவது வழக்கம். 'சூன்ரி மனோரத் சேவா' எனப்படும் இந்த விழாவிற்காக, 200க்கும் அதிகமான புடவைகள் பயன்படுத்தப்பட்டன.
உதவும் மனது உள்ளத்தில் இருந்தால்தான் மனிதர்களுக்கு பெருமை..: விடாத மழையில் நனைந்து கொண்டிருந்த மாற்றுத்திறனாளியை குடை பிடித்து ரோட்டை கடந்து பாதுகாப்பான இடத்தில் விட்டு சென்ற இந்த பெண்கள்.இடம், திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம்.