பார்லிமென்ட் மீது 2001 டிசம்பர் 13ல் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் பாதுகாப்பு படையினர் உட்பட 10 பேர் உயிரிழந்தனர். நினைவு தினத்தில் வீர மரணம் அடைந்தவர்களின் புகைப்படங்களுக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார். உடன் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் கோபாலபுரத்தில் உள்ள கெங்கையம்மன் கோவிலில் ஆண்டுதோறும் சிரசு திருவிழா நடைபெறும். அந்த வகையில் நடந்த சிரசு ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
சர்வதேச வாழும் கலை மையத்தின் 45வது ஆண்டு விழா மற்றும் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் குருஜியின் 70வது பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னவிஸ், ஹரியானா கவர்னர் ஆஷிம் குமார் கோஷ், உடன் ரவிசங்கர் குருஜி.