நாடு முழுவதும் அக்னி வீரர்களை தேர்ந்தெடுக்கும் பணி நடந்து வரும் வேளையில், கோவை ரெட் பீல்ட்சில் தேர்தெடுக்கப்பட்ட வீரர்களின் சான்றிதழ் சரி பார்க்கும் பணி நடந்தது.
சிவகங்கை அருகே முத்துப்பட்டி - பொன்னகுளம் ரோட்டில் மயானம் அமைக்க இடம் ஒதுக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் மனித சங்கிலியாக நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னையில் இரண்டு நாட்களாக வெயில் அதிகமாக காணப்படுவதால் அலுவலகங்களுக்கு கையில் குடையுடனும்,முகத்தை மூடியபடியும் செல்லும் பொதுமக்கள்.இடம் : திருவான்மியூர்
சென்னை தரமணி 100 அடி சாலையில் உள்ள நடை மேம்பாலத்தில் நீண்ட நாட்களாக செயல்படாமல் இருந்த நகரும் மின் படிக்கட்டுகள் அகற்றப்பட்டு நடைபாதையில் போடப்பட்டுள்ளது இதனால் பாதசாரிகள் சிரமப்படுகின்றனர்