திருநெல்வேலி மாவட்டம் ராஜவல்லிபுரம் பகுதியில் உழுத வயலை மட்டப்படுத்துவதற்கு மாடுகள் கிடைப்பதில் சிரமம். தாய் - மகள் இருவரும் இணைந்து மட்டப்பளகை கொண்டு வயலை சமன்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
பிரசார மேடையில் தலைவர்கள் கர்ஜிப்பதற்கு முன்பே, தொண்டர்கள் தங்கள் முகத்தில் தலைவர்களை சுமக்க துவங்கிவிட்டனர். மாஸ்க்கை கழற்றினால் நான்...மாட்டிக்கொண்டால் என் தலைவர்! என்ற ரேஞ்சுக்கு கலக்கி வருகின்றன இந்த லீடர் மாஸ்க்குகள். இடம்: பிராட்வே, சென்னை.
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் பங்குனி பெருவிழாவில் இரண்டாம் நாளில், வெள்ளி சூரிய பிரபையில் வீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்த கபாலீஸ்வரர்- கற்பகாம்பாள்.
மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களின் விவசாயம் மற்றும் குடிநீர் ஆதாரமாக விளங்கும் வைகை அணை கோடை வெயில் சுட்டெரிக்க துவங்கியுள்ளதால் நீர்வரத்து இன்றி வறண்டுள்ளது. இடம்: ஆண்டிப்பட்டி, தேனி.
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் நாளை கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இன்று நடந்த யாகசாலை பூஜையில் கலந்து கொண்ட உபயதாரர்கள் மற்றும் பொதுமக்கள்.