புதுச்சேரி கடற்கரை சாலையில் மழை காலங்களில் தேங்கி நிற்கும் மழை நீர் கடலுக்கு வெளியேறும் வகையில், கடற்கரை சாலையை மேம்படுத்தும் பணிக்காக, சாலையை (லெவல்) மட்டம் பார்க்கும் பணி நடந்தது.
திருநெல்வேலி பொருநை அருங்காட்சியகத்தில் பொங்கல் பண்டிகை விடுமுறை நாளான இன்று அதிக எண்ணிக்கையில் பார்வையாளர்கள் கூடியதால் நீண்ட வரிசையில் காத்திருந்து கண்டுகளித்தனர்.
பொள்ளாச்சி அருகே டாப்சிலிப் கோழிகமுத்தி யானைகள் முகாமில், யானை பொங்கல் விழா நடந்தது. அதில், யானைகளுக்கு வனத்துறை அதிகாரிகள், கரும்பு உள்ளிட்டவை வழங்கினர்.