நாடு முழுவதும் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் இப்போதே களைகட்ட துவங்கி விட்டது. ஜம்மு காஷ்மீரில் உள்ள ஜம்முவில் புத்தாண்டை வரவேற்கும் விதமாகவும், உலகில் அமைதி நிலவ வலியுறுத்தியும் அணிவகுத்த பள்ளி மாணவர்கள்.
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, உலகப்புகழ் பெற்ற மணல் கலைஞர் சுதர்சன் பட்நாயக் ஒடிஷாவின் புரி கடற்கரையில் சாண்டா கிளாசின் பிரமாண்ட மணல் சிற்பத்தை, மணலுடன் இயற்கை வண்ணங்களையும், மலர்களையும் பயன்படுத்தி அமைத்துள்ளார்.
கிறிஸ்துமஸ், புத்தாண்டு தொடர் விடுமுறை காரணமாக வெளியூர் செல்லும் பயணியரால் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் நேற்று நிரம்பி வழிந்தது. கோவை செல்லும் 'இன்டர் சிட்டி' ரயிலில் முன்பதிவு இல்லாத பெட்டியில் இடம் பிடிக்க அலைமோதிய கூட்டம்.
கிறிஸ்துமஸ் தின விடுமுறையை முன்னிட்டு புதுச்சேரியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். புதுச்சேரியின் நேற்றிரவு கொக்கு பார்க் சந்திப்பில் ஏற்பட்ட நெரிசலில் நீண்ட தூரத்திற்கு நின்ற வாகனங்கள்.