கிறிஸ்துமஸ் தினம் மற்றும் அரையாண்டு விடுமுறை ஆரம்பம் என்பதாலும் வண்டலூர் உயிரியல் பூங்காவில் பொதுமக்கள் குழந்தைகளுடன் கூட்டம் கூட்டமாக வந்து கண்டு ரசித்தனர்.
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கோடை வெயில் கொளுத்துகிறது; அதன் தாக்கத்திலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள தாயும்-சேயும் துணியால் போர்த்தியபடி சென்றனர்.
நாடு முழுவதும் கோடை வெயில் வாட்டி வதைக்கிறது. ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் உள்ள உயிரியல் பூங்கா ஒன்றில் கூண்டில் அடைக்கப்பட்ட புலி மீது தண்ணீரை ஊற்றி குளிர்வித்த வனத்துறை ஊழியர்.
உத்தரபிரதேச மாநிலம் காசியில் பழமையான மற்றும் நெரிசலான தால் மண்டி பகுதியில் உள்ள சட்டவிரோத கட்டடங்கள் மற்றும் ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றி வருகின்றனர். ஆக்கிரமிப்பு அகற்றும் பணியின் போது தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட போலீசார்.
கர்நாடக மாநிலம் ஷிவமொகா மாவட்டம் சோரப் தாலுகாவில் உள்ள சித்தூரில் ஏரி வேட்டை எனப்படும் பாரம்பரிய கருவிகளை பயன்படுத்தி மீன் பிடிக்கும் நிகழ்வான கெரே பேட்டே திருவிழாவில் ஆர்வத்துடன் மீன் பிடித்த மக்கள்.
நாகலாந்து மாநில கவர்னர் நந்த் கிஷோர் யாதவ், காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை சந்தித்து ஆசி பெற்றார். அருகில் இளைய மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள்.
தென்மேற்கு பருவமழை சற்று முன்னரே பெய்யும் என்று சொன்னார்கள்… மகிழ்வோடு இன்று வரும், நாளை வரும் என்று காத்திருந்து, காய்ந்து போன குளத்துக்கு கடைசி சாட்சி இந்த மீன்! இடம்: கோவை, நாகராஜபுரம் நரசாம்பதி குளம்