சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பகல் பத்து- ராப்பத்து உற்சவம் நடந்து வருகிறது. பகல் பத்தின் ஆறாவது நாளில், ஸ்ரீ பகாசுரவதம் திருக்கோலத்தில் தேவியருடன் எழுந்தருளிய பார்த்தசாரதி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் கோபாலபுரத்தில் உள்ள கெங்கையம்மன் கோவிலில் ஆண்டுதோறும் சிரசு திருவிழா நடைபெறும். அந்த வகையில் நடந்த சிரசு ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
சர்வதேச வாழும் கலை மையத்தின் 45வது ஆண்டு விழா மற்றும் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் குருஜியின் 70வது பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னவிஸ், ஹரியானா கவர்னர் ஆஷிம் குமார் கோஷ், உடன் ரவிசங்கர் குருஜி.