sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

கிழக்காசிய நாடான வட கொரியாவுக்கும், அதன் அண்டை நாடான தென் கொரியாவுக்கும் இடையே நீண்ட காலமாக மோதல் உள்ளது. இந்நிலையில் அணுசக்தி திறனுடன் கூடிய நீர்மூழ்கி கப்பல் தயாரிக்க அமெரிக்காவுடன் தென் கொரியா ஒப்பந்தம் செய்துள்ளது.
26-Dec-2025

ShareTweetShareShare

2/

கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில் சுனாமி தினத்தையொட்டி மீனவர்கள் கடலில் பாலை ஊற்றி அஞ்சலி செலுத்தினர்.
26-Dec-2025

3/

ஊட்டி தலைகுந்தா பகுதியில் உறைபனியின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இப்பகுதியில் குறைந்தபட்ச வெப்பநிலை மைனஸ்-4 டிகிரி செல்சியசாக இருந்தது.
26-Dec-2025

4/

ஊட்டிக்கு வந்த சுற்றுலா பயணிகள் படகு இல்ல ஏரியில் சவாரி செய்வதில் ஆர்வம் காட்டினர்.
26-Dec-2025

5/

திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை வளாகத்தில் அரவைக்காக டிராக்டரில் கொண்டு வந்த கரும்பை ருசி பார்த்த பசு மாடு. இடம்: திருவாலங்காடு.
26-Dec-2025

6/

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 101வது பிறந்த நாளையொட்டி, அவரது வாழ்வையும், சித்தாந்தத்தையும் பிரதிபலிக்கும் வகையில் உத்தர பிரதேசத்தின் லக்னோவில் அமைக்கப்பட்டுள்ள, தேசிய எழுச்சி தலத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். இதில் அமைக்கப்பட்டுள்ள வாஜ்பாயின் 65 அடி உயர பிரமாண்ட வெண்கல சிலை.
26-Dec-2025

7/

சென்னை கோயம்பேடு சந்தையில் ஓரளவு கெட்டுப்போன ஆப்பிள் உள்ளிட்ட பழங்களை வியாபாரிகள் தூக்கி எறிந்துள்ளனர். மலை போல குவிந்து கிடக்கும் அவற்றில் இருந்து பயோ காஸ் எனப்படும் உயிரி எரிவாயு தயாரிக்க முழுவதும் கெட்டுப்போகாத பழங்களை பிரித்தெடுக்கும் ஒப்பந்த ஊழியர்.
26-Dec-2025

8/

சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பகல் பத்து- ராப்பத்து உற்சவம் நடந்து வருகிறது. பகல் பத்தின் ஆறாவது நாளில், ஸ்ரீ பகாசுரவதம் திருக்கோலத்தில் தேவியருடன் எழுந்தருளிய பார்த்தசாரதி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
26-Dec-2025

இன்றைய போட்டோ25-Dec-2025

9/

விழுப்புரம் முத்தாம்பாளையம் பகுதியில் சாலை போடும் பணி நடப்பதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
25-Dec-2025

10/

கோவை சுந்தராபுரம் குறிச்சி பகுதியில் நடந்து வரும் அரவான் திருவிழாவையொட்டி தங்க முக அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்த அரவான் மற்றும் ஆஞ்சநேயர்.
25-Dec-2025

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us