உலக நாயகன் கமல் ஹாசன், 'தினமலர் வாரமலர்' அந்துமணியின் அபிமான வாசகர். இவருக்கு மணிமேகலை பிரசுர நிர்வாக இயக்குநர் ரவி தமிழ்வாணன், அந்துமணியின், 'பார்த்தது கேட்டது படித்தது' நூலை வழங்கினார். இடம்: ராஜ்கமல் இன்டர்நேஷனல் அலுவலகம், ஆழ்வார்பேட்டை, சென்னை.
கம்பிகளுக்குள் கானகத்து மயில்.! கோவை மாநகராட்சி வ.உ.சி., உயிரியல் பூங்காவில் இருந்த பறவைகளும் விலங்குகளும் மாற்று இடத்துக்கு அனுப்பப்பட்ட பின்பும் கானகத்து மயிலுக்கு களம் மாற பிடிக்கவில்லை போலே.
திருப்பூர், த.வெ.க தெற்கு தொகுதி எம்.எல்.ஏ பாலமுருகன் ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள பூ மார்க்கெட் ஆய்வு மேற்கொண்டார். கட்சி தொண்டர்கள் சூழ்ந்து கொண்டதால் பூ வியாபாரிகளை சந்திக்க முடியாமல் தினறல்.