இந்திய கடற்படை அதிகாரி கார்த்திகேயனின் மகளான காம்யா அண்டார்டிகாவின் தென்துருவத்தில் ஸ்கையிங் எனப்படும் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டு உலக சாதனை படைத்திருக்கிறார். சர்வதேச அளவில் இச்சாதனையை படைத்த இரண்டாவது இளம் பெண் இவர்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் கோபாலபுரத்தில் உள்ள கெங்கையம்மன் கோவிலில் ஆண்டுதோறும் சிரசு திருவிழா நடைபெறும். அந்த வகையில் நடந்த சிரசு ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
சர்வதேச வாழும் கலை மையத்தின் 45வது ஆண்டு விழா மற்றும் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் குருஜியின் 70வது பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னவிஸ், ஹரியானா கவர்னர் ஆஷிம் குமார் கோஷ், உடன் ரவிசங்கர் குருஜி.