இந்திய கடற்படை அதிகாரி கார்த்திகேயனின் மகளான காம்யா அண்டார்டிகாவின் தென்துருவத்தில் ஸ்கையிங் எனப்படும் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டு உலக சாதனை படைத்திருக்கிறார். சர்வதேச அளவில் இச்சாதனையை படைத்த இரண்டாவது இளம் பெண் இவர்.
சட்டசபை தேர்தல் நெருங்குவதை யொட்டி ஓட்டுச்சாவடியில் இருந்து தூரத்தை அறிந்து கொள்ளும் வகையில் சாலையில் குறியீடு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள மாநகராட்சி ஊழியர்கள். இடம்.ஜி.என்.செட்டி சாலை, தி.நகர்
உத்தமபாளையம் தாலுகா காமயகவுண்டன்பட்டியில் கல்குவாரி செயல்பட வலியுறுத்தி தேனி கலெக்டர் அலுவலகம் அருகே ஏ.ஐ.டி.யூ.சி., சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.