திருநெல்வேலி மாவட்டம், சுத்தமல்லியில் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே உள்ள அணைக்கட்டில் இருந்து, திருநெல்வேலி கால்வாய் பிரிந்து செல்கிறது. இங்குள்ள அணையின் பக்கவாட்டு சுவரில் ஏற்பட்டுள்ள உடைப்பால் வீணாக வெளியேறிய தண்ணீர்.
கம்பிகளுக்குள் கானகத்து மயில்.! கோவை மாநகராட்சி வ.உ.சி., உயிரியல் பூங்காவில் இருந்த பறவைகளும் விலங்குகளும் மாற்று இடத்துக்கு அனுப்பப்பட்ட பின்பும் கானகத்து மயிலுக்கு களம் மாற பிடிக்கவில்லை போல
திருப்பூர், த.வெ.க தெற்கு தொகுதி எம்.எல்.ஏ பாலமுருகன் ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள பூ மார்க்கெட் ஆய்வு மேற்கொண்டார். கட்சி தொண்டர்கள் சூழ்ந்து கொண்டதால் பூ வியாபாரிகளை சந்திக்க முடியாமல் தினறல்.