புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் ஆத்மநாதசுவாமி திருக்கோவிலில், மார்கழி மாதம் திருவாதிரையை முன்னிட்டு நடந்த திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடிக்க அசைந்து வந்த தேர்.
மயிலாடுதுறை மாவட்டம் கஞ்சா நகர கிராமத்தில் பழமையான அந்தோணியார் சர்ச் உள்ளது. இங்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற பக்தர்கள் அங்க பிரதட்சணம் செய்தும் மண்டியிட்டு தீச்சட்டி ஏந்தியும் வழிபாடு செய்தனர்.
செங்கல்பட்டு திருப்போரூர் பேரூராட்சி கிரிவல சாலையில் உள்ள சிறுவர் விளையாட்டு மையத்தில் இடையூறாக இருந்த ஜல்லி கற்கள் அகற்றப்பட்டு எம்-சாண்ட் கொட்டி சீரமைக்கப்பட்டது.
கேரளாவின் கொச்சி கோட்டை மைதானத்தில், 2026ம் புத்தாண்டை முன்னிட்டு பிரமாண்ட 50 அடி உயர, பாப்பஞ்சி உருவ பொம்மை எரிக்கப்பட்ட தருணத்தின் போது பல ஆயிரக்கணக்கான மக்கள் கூடி மகிழ்ந்தனர். பாப்பஞ்சி என்றால் போர்ச்சுக்கீசிய மொழியில் தீமைகளின் மொத்த உருவம் என அர்த்தம்.