sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 02, 2026 ,மார்கழி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

போட்டோ

/

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

இன்றைய போட்டோ

டாக்டர் எம்.ஜி.ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் 34வது பட்டமளிப்பு விழா சென்னையில் நடந்தது. இதில் துணை ஜனாதிபதி சி. பி. ராதாகிருஷ்ணன் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். உடன் இடமிருந்து வலம் - ஏ.சி.எஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை செயலர் ரவிகுமார், துணைவேந்தர் கீதாலட்சுமி, தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சுப்பிரமணியன், டாக்டர் எம்.ஜி.ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் வேந்தர் ஏ.சி சண்முகம், தமிழக பா.ஜ தலைவர் நயினார் நாகேந்திரன், பல்கலையின் தலைவர் அருண்குமார் மற்றும் பதிவாளர் பழனிவேலு. இடம்: ஏ.சி.எஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை வளாகம், வேலப்பன்சாவடி.
02-Jan-2026

ShareTweetShareShare

2/

சம வேலைக்கு சம ஊதியம் கோரி சென்னை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு இடைநிலை ஆசிரியர்கள் எட்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
02-Jan-2026

3/

கல்லிலே கலை வண்ணம் கண்டான்: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் புது மண்டபம் பொலிவு பெற்று தற்போது கலைநயம் மிக்க கற்கோயிலாக காட்சி தருகிறது .இம்மண்டபத்தை நிரந்தரமாக பார்வையாளர், கோவிலுக்கு வரும் பக்தர்கள் பார்வையிட மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
02-Jan-2026

4/

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பொங்கல் பானைக்கு வர்ணம் தீட்டும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளி. இடம்: மேட்டுப்பாளையம் ரோடு, கோவை.
02-Jan-2026

5/

ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கையில் ஆருத்ரா தரிசன விழாவில் சுவாமி தரிசனத்திற்காக வரிசையில் நின்ற பக்தர்கள்.
02-Jan-2026

6/

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள சிறப்புமிக்க ஆம்பர் கோட்டையில் அலங்கரிக்கப்பட்ட யானைகள் மீது சுற்றுலாப் பயணியர் சவாரி செய்து புத்தாண்டைக் கொண்டாடினர். யானைகளின் நெற்றியில் வண்ணமயமான ஓவியங்கள் தீட்டப்பட்டு, ராஜஸ்தானி பாரம்பரியத் துணிகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது அவர்களை பெரிதும் கவர்ந்தது.
02-Jan-2026

7/

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் ஆத்மநாதசுவாமி திருக்கோவிலில், மார்கழி மாதம் திருவாதிரையை முன்னிட்டு நடந்த திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடிக்க அசைந்து வந்த தேர்.
02-Jan-2026

8/

மயிலாடுதுறை மாவட்டம் கஞ்சா நகர கிராமத்தில் பழமையான அந்தோணியார் சர்ச் உள்ளது. இங்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற பக்தர்கள் அங்க பிரதட்சணம் செய்தும் மண்டியிட்டு தீச்சட்டி ஏந்தியும் வழிபாடு செய்தனர்.
02-Jan-2026

9/

கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.
02-Jan-2026

10/

கேத்தி பாலாடா பகுதியில் காலை நேர பனிப்பொழிவின் போது, மலைகளின் மீது தவழ்ந்து செல்லும் மேக கூட்டங்கள் வண்ண மயமாய் காட்சி அளிக்கின்றன.
02-Jan-2026

Advertisement

Advertisement Tariff



      Dinamalar
      Follow us