அரசாணைப்படி அலுவலகங்களில் அண்ணா மற்றும் அம்பேத்கர் உள்ளிட்ட தலைவர்கள் படத்தை வைக்கக் கோரி கோவை கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர்.
திருநெல்வேலி பொருநை அருங்காட்சியகத்தில் பொங்கல் பண்டிகை விடுமுறை நாளான இன்று அதிக எண்ணிக்கையில் பார்வையாளர்கள் கூடியதால் நீண்ட வரிசையில் காத்திருந்து கண்டுகளித்தனர்.
பொள்ளாச்சி அருகே டாப்சிலிப் கோழிகமுத்தி யானைகள் முகாமில், யானை பொங்கல் விழா நடந்தது. அதில், யானைகளுக்கு வனத்துறை அதிகாரிகள், கரும்பு உள்ளிட்டவை வழங்கினர்.