ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடந்த உங்கள் ராணுவத்தை அறிந்து கொள்ளுங்கள் கண்காட்சியின் போது, போர் மற்றும் தற்காப்பு கலைத் திறன்களை நம் ராணுவ வீரர்கள் வெளிப்படுத்தினர். அதிநவீன ஆயுதங்கள் மற்றும் போர் கருவிகளின் அணிவகுப்பு பொது மக்களைக் கவர்ந்தது.
கன்னியாகுமரி மாவட்டம் சுவாமி தோப்பில் உள்ள அய்யா வைகுண்டரின் தலைமைப்பதிக்கு அவரது 194ம் அவதார தினத்தையொட்டி நாகர்கோவிலில் இருந்து பேரணியாக சென்ற பக்தர்கள்.
சென்னை கோயம்பேடு பகுதியில் செல்லும் முதல் கட்ட மெட்ரோ ரயில் பாதைக்கு மேல்பகுதியில் மாதவரம்- சோழிங்கநல்லூர் மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட தடத்துக்கான மேம்பால பாதை பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. இடம்: கோயம்பேடு மார்க்கெட்- விருகம்பாக்கம் இணைப்பு பகுதி.
சென்னை உள்ளகரம் பகுதியில் ராமகிருஷ்ணா தெருவில் உள்ள கல்யாண மண்டபம் அலங்காரம் செய்யும் பொருட்கள் வைத்திருந்த குடோனில் ஏற்பட்ட தீயினை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்புத்துறையினர்.இடம் : உள்ளகரம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கோவை கலெக்டர் அலுவலகம் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட ஊழியர்களை போலீசார் கைது செய்தனர்.
கண்டாச்சிபுரம் வருவாய் வட்ட வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு சார்பில் அரகண்டநல்லூர் பகுதியில் நீதி மன்றம் கோரி விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தனர்.