உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் உள்ள காயத்ரி தீர்த்த சாந்திகுஞ்ச் மையத்தின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் வகையில், பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த மக்கள் பாரம்பரிய உடையணிந்து பிரமாண்டமான யாத்திரையில் பங்கேற்றனர்.
சென்னையில் சம வேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தால், கோட்டை ரயில் நிலையம் அருகே பாரிமுனை சந்திப்பில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல்.
பிளாஸ்டிக் கழிவுகளால் செய்யப்பட்ட கைவினை பெருட்கள் கண்காட்சி கோவை கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்தது. இதில், இடம் பெற்றுள்ள பொருட்களை பார்வையிட்ட கல்லூரி மாணவர்கள்.