கோடை துங்கியுள்ள நிலையில், ஆவடி போலீஸ் கமிஷனரகத்திற்கு உட்பட்ட போக்குவரத்து போலீசாருக்கு வெயிலில் இருந்து தற்காத்துக் கொள்ள பித் ஹாட் எனும் காகிதக்கூழ் தொப்பி மற்றும் கூலிங் கிளாஸ் வழங்கப்பட்டுள்ளன. இடம்: பாடி, சென்னை.
மேற்காசிய போர் பதற்றம் காரணமாக ஜம்மு காஷ்மீரின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் வெடித்தன. இதனால் பாதுகாப்பு கருதி மூடப்பட்டிருந்த பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டன. ஸ்ரீநகரில் மாணவ- மாணவியர் சீருடை அணிந்து உற்சாகத்துடன் பள்ளிக்கு சென்றனர்.
தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும் நிலையில் உப்பளங்களில் உப்பு உற்பத்தி பணி துவங்கி ஜரூராக நடந்து வருகிறது.