ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவு காரணமாக, ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் நூற்றுக்கணக்கான லாரிகள் வரிசை கட்டி நிற்கின்றன. சாலையில் மலைபோல் பனி குவிந்து இருப்பதால் வாகனங்களை இயக்க முடியாமல் போக்குவரத்து முடங்கியுள்ளன.
கோவையில் ஜாக் அமைப்பு சார்பில் ரம்ஜான் சிறப்புத் தொழுகை குனியமுத்தூர் ஆயிஷா மஹால் வளாகத்தில் நடந்தது. இதில் தொழுகைக்குப் பின் ரம்ஜான் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்ட சிறுவர்கள்.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தும் கோவையில் இன்னும் சில பகுதிகளில் கட்சி சார்ந்த போஸ்டர்கள் அகற்றப்படாமல் தான் உள்ளன. இடம்: காட்டூர் பிள்ளையார் கோவில் தெரு.
வடநாட்டுக்காரங்க அதிகமா ஆயிட்டாங்க போல இருக்கு...! கோவையில் கேஸ் தட்டுப்பாடு மெல்ல, மெல்ல அதிகரிக்க துவங்கியதால் சில சிறிய ஓட்டல்களில் உணவு பொருட்களின் விலைகளை உயர்த்தி உள்ளனர்.