தைப்பூசத்தையொட்டி, காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் 3 நாட்கள் நடைபெறும் தெப்போத்சவம் துவங்கியது. இதில் ஏலவார்குழலி அம்பிகையுடன், ஏகாம்பரநாதர் மலர் அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளி உலா வந்தார்.
மும்பை உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து மஹாராஷ்டிராவின் பாந்த்ரா ரயில் நிலையத்தை ஒட்டிய கரீப் நகரில் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டிருந்த 500க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.
சிறுமுகை வன சரகத்திலிருந்து தாயை பிரிந்த யானை குட்டி., பெத்தி குட்டையில் உள்ள வன உயிரின இடம் மாற்றம் மற்றும் சிகிச்சை மையத்தில் வைத்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.