ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி அபய்குமார் சிங் ஓய்வு பெற்றார். சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் பிரிவு உபசார விழா நடந்தது. டிஜிபி வெங்கட்ராமன், கமிஷ்னர் அருண் வாழ்த்து தெரிவித்தனர்.
தைப்பூசத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டை இந்திரா நகர் கடற்கரையில் மீன்வளம் பெருகவும், மீனவர்களின் நலன் வேண்டியும் கடலில் பால் ஊற்றி வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள்.