சென்னையில் இரண்டு நாட்களாக வெயில் அதிகமாக காணப்படுவதால் அலுவலகங்களுக்கு கையில் குடையுடனும்,முகத்தை மூடியபடியும் செல்லும் பொதுமக்கள்.இடம் : திருவான்மியூர்
பிரசார மேடையில் தலைவர்கள் கர்ஜிப்பதற்கு முன்பே, தொண்டர்கள் தங்கள் முகத்தில் தலைவர்களை சுமக்க துவங்கிவிட்டனர். மாஸ்க்கை கழற்றினால் நான்...மாட்டிக்கொண்டால் என் தலைவர்! என்ற ரேஞ்சுக்கு கலக்கி வருகின்றன இந்த லீடர் மாஸ்க்குகள். இடம்: பிராட்வே, சென்னை.
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் பங்குனி பெருவிழாவில் இரண்டாம் நாளில், வெள்ளி சூரிய பிரபையில் வீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்த கபாலீஸ்வரர்- கற்பகாம்பாள்.
மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களின் விவசாயம் மற்றும் குடிநீர் ஆதாரமாக விளங்கும் வைகை அணை கோடை வெயில் சுட்டெரிக்க துவங்கியுள்ளதால் நீர்வரத்து இன்றி வறண்டுள்ளது. இடம்: ஆண்டிப்பட்டி, தேனி.