ராணிப்பேட்டை மாவட்டத்தில் நவல்பூர் நெடுஞ்சாலை ஓரத்தில் சாலை பணிக்காக கொட்டப்பட்ட 60 ஆண்டுகள் பழமையான அரச மரம், செங்காடு ஏரிக்கரையில் மீண்டும் நடப்பட்டது. அதற்கு அப்பகுதி மக்கள் பூஜை செய்து வழிபட்டனர்.
தமிழக விளையாட்டு துறை அமைச்சர் ஆதவ் சென்னை பெரிய மேட்டில் உள்ள நேரு மைதானத்தை ஆய்வு மேற்கொண்டார். இதில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி மற்றும் தமிழ்நாடு விளையாட்டு ஆணையத்தின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
சென்னையில் அதிகரித்து காணப்படும் வெயிலின் தாக்கத்தின் காரணமாக திருவொற்றியூர் சூரை மீன் பிடி துறைமுக கடற்கரையில் ஆனந்த குளியலிலும் சிறுவர்கள்.இடம்: திருவொற்றியூர் குப்பம்.
கள்ளக்குறிச்சி ஒழுங்குமுறை மார்க்கெட் கமிட்டியின் ஒரு பகுதியில் இயங்கி வந்த பழைய கலெக்டர் அலுவலகம் தற்போது கேட் மூடப்பட்டு அரசு வாகனம் வெளியே நிறுத்தப்பட்டுள்ளது.