பழங்குடியினரின் பாரம்பரியத்தை கொண்டாடும் வகையில் சத்தீஸ்கரின் பஸ்தார்
பகுதியில், கடந்த ஆண்டு முதல் பண்டும் என்ற திருவிழா நடத்தப்படுகிறது.
திருவிழாவில் கலைநிகழ்ச்சியில் பாரம்பரிய உடையில் பங்கேற்ற பழங்குடியின
சிறுமி.
பணி நிரந்தரம் மற்றும்.பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உடுமலை அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் கௌரவவிரிவுரையாளர்கள் காலவரையறையற்ற பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் முன்பு மொடையூர் கிராமத்தை சேர்ந்த பார்வையற்ற சுகந்தி வீட்டுமனை பட்டா வழங்க கோரி தனது குழந்தைகள் மற்றும் கணவர் உடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வு செய்முறை தேர்வுகள் தமிழகம் முழுவதும் துவங்கியுள்ளது. திருப்பூர் ஜெய்வாபாய் பள்ளியில் மனையியல் செய்முறை தேர்வுக்காக, சத்தான உணவுகளை செய்து அசத்திய மாணவிகள்.
டெல்லியில் நடந்த குடியரசு தின விழா அணிவகுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லூரி மாணவர்களுக்கு கல்லூரி நிர்வாகம் சார்பில் மேளதாளம் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது.