தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. இதில் பெண்கள் தங்கள் சேலையால் வாய்களை மூடிக்கொண்டனர்.
திருப்பூர், ரயில்வே ஸ்டேஷன் முன் உதவித்தொகை உயர்த்தி வழங்க வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
கோவை சின்னவேடம்பட்டி கவுமார மடாலயத்தில் உள்ள ராமானந்த உயர்நிலைப்பள்ளி மற்றும் டி.கே.எஸ்., மேல்நிலைப்பள்ளி சார்பில் செய்தித்தாள் படிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.